என் உணர்வுகளை விமர்சியுங்கள்.. ஆனால்....??

ஒரு துளி மழை....


ஒரு துளி மழை - பின்
மீண்டும் பிரபஞ்சம் ஆரம்பம்....

ஒரு மணியில் இருந்து
சில பருக்கைகளை பெற்றுவிட
எத்தனை போராட்டம்...
அண்டம்... ஆகாயம்...
இரண்டுக்கும் இடையில்...
தினம் தினம் போராட்டம்..

கால்வயிறு நிரப்ப
கால் வைத்து
காணாமலும் போய்விடுவர்...

சேறு... சோறு...
இரண்டுக்கும் நடுவில்
ஒரு உலகப்போர்..
தண்ணீர் வேண்டி கண்ணீர்
கொட்டும் எம் உழவர்
வாழ்வில் தினம் தினம்
உலகப்போர்தான்...

களங்களில் வெற்றி நிச்சயம்
கழனியில் நட்டம் மட்டுமே
இப்போது மிச்சம்..
இறையிடம் இறைஞ்ச மட்டுமே
முடிகிறது எம்மால்...

பொங்கல்... இப்போதெல்லாம்..
கவலைகளின் பொங்கலாகவே
முடிந்துவிடுகிறது....

தமிழ்நிலா

காற்றுவெளி 2014

உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்..

5 comments:

Anonymous said...

வணக்கம்
கவிதையின் வரிகள் சிறப்பு.. வாழ்த்துக்கள்

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

திண்டுக்கல் தனபாலன் said...

ஒவ்வொரு வரியும் உண்மை...

My Camera Moments said...

அருமை நண்பா வாழ்த்துக்கள்...

திண்டுக்கல் தனபாலன் said...

உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2014/02/thalir-suresh-day-4.html) சென்று பார்க்கவும்... நன்றி...

Sanjay Thamilnila said...

நன்றி மிக்க நன்றி

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...